Tuesday, June 28, 2016

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் - ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

ஆவாரம் பூ


ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.


இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.


மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Thanks:  machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 ) தை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் .
ஆவாரம் பூ 1ஆவாரம் பூ
ஆவாரம் பூ 2ஆவாரம் பூ 3
ஆவாரம்பூ
ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின்விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் .ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம்  ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல்  அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .  
ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள்  ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது  இந்த  பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ  காலையில் ஒரு கைப்பிடி , மாலையில்  ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள  தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு  சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .
” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு  ” ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை.அதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.
ஆவாரம்பூ
தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு
மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்
பூவைச் சேராவாரம் பூ
– ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:-ஆவாரம்பூ பிரமேக  நீர் , வறட்சி , உடம்பிற் பூத்த உப்பு , கற்றாழை நாற்றம் இவைகளை நீக்கும் . தேகத்திற்குப் பொற்சாயலைத் தரும் .
செய்கை:- சங்கோசனகாரி, சமனகாரி
உபயோகிக்கும் முறை:- ஆவாரம் பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி பாகப்படி கூட்டமுது செய்து உண்பது  வழக்கம் . இதனால் மது மூத்திரம் , இரத்த மூத்திரம் , பெரும்பாடு  ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , உட்காங்கை , தாகம்  இவைகள் போகும் .
இன்னும் நிழலில் இதழ்  இதழாக சீலையில் போட்டு வதங்கி வரும் சமயம் புஷ்பத்தை எடுத்து  இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு அப்பட்டமான தேன் கூட்டி கலந்து  பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு 1/4பலம்அளவிற்கு (ஒரு பலம் என்பது 35 கிராம்) தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் . இந்தப் பூவை உலர்த்தி வேளைக்கு கால் பலம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி  காப்பி போல் சாப்பிடுவதுண்டு . இதனால் நீரிழிவு , உட்சூடு ,நீர்க்கடுப்பு  ,முதலியவைகள்குணமாகும்.
இந்தப் பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வரகற்றாழை நாற்றம் ,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும் . இன்னும் நல்ல தேகத்தை தரும்.
ஆவாரை
சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேக நீர்
செல்லா மொழிக்கு மெரிவகற்று – மேல்லவச
மாவாரை பம்பரம் போலாட்டுந் தொழிலணங்கே!
யாவாரை மூலி யது
– ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:-ஆவாரைச் செடியானது  சர்வப் பிரமேக மூத்திர ரோகங்களையும் , ஆண் குறி எரி  வந்தததையும் குணமாக்கும் .
செய்கை:- சங்கோசனகாரி, வித்திற்கு காம விர்த்தினி
உபயோகிக்கும் முறை:-அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து , வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி , தினம் இரு வேளை 1 1/ 2 , அவுன்ஸ் ( 45 மில்லி லிட்டர் ) வீதம் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் ) , ரத்த மூத்திரம் (ரத்த வெட்டை ), பெரும்பாடு( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) ,இவைகள் போகும் .
இத்துடன் இதர சரக்குகளை கூட்டி லேகியமாகவும்  ,  சூரணமாகவும் , கியாழமாகவும் கொடுப்பது உண்டு . அவற்றுள் சில முறைகளாவன
ஆவாரைப் பஞ்சக சூரணம்
ஆவாரையிலை , ஆவாரம்பூ , ஆவாரம் பட்டை , ஆவாரம் வேர் , ஆவாரங்காய் வகைக்கு வகைக்கு வராகனெடை 4 ,கடலைழிஞ்சிப்பட்டை, மருத மரப்பட்டை , நாவல் மரப்பட்டை  , தண்ணீர் விட்டான் கிழங்கு , பாதிரி வேர் , வகைக்குப் பலம் 2 , மரமஞ்சள் , கல்நார் வகைக்குப் பலம் ஒன்று , குரோசாணி ஓமம்  பலம் கால் , ஆகிய இவற்றை இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க . வேண்டும் போது வேளைக்கு  1 தோலா நிறையுள்ள சூரணத்தை கால் படி சலத்தில் போட்டு அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிக் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் )  , தேக  காங்கை ( சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல் ) , அதீத   தாகம் , முதலியவைகள் நீங்கும் . இன்னமும் இக்கியாழம் நாவிற்கு ருசியாக  இருக்க வேண்டின் சிறிது நாட்டுப்  பசுவின்   பாலையும் கூட்டிக் கொள்ளலாம் . இதனால் இதன் குணங் கெடாது .

Thanks : திரு அமீர் சுல்தான்


No comments:

Post a Comment