Sunday, February 19, 2012

அம்மா



நன்றி :வித்யாசாகர்
ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்
அசைவில் மட்டுமே அசைந்து -
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;
டைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!
ண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை -
உன்னையே சாரும் அம்மா!
னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா!!
————————————————————————
வித்யாசாகர்

No comments:

Post a Comment