Sunday, February 19, 2012

அன்னை

அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்க்காத கடவுள் அவள்
காணியில் காணக்கிடைக்கும் அவளின்
அருள் .
பத்து திங்கள் கருவிருந்தேன்
அவள்
பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே !
பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும்
தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் வரம்வேண்டும் .
இல்லை ஒரு பிறவியாவது நீ
என் மகளாய் மடியினில் தவழ்ந்திட
வேண்டும் …..

No comments:

Post a Comment