Sunday, February 19, 2012


அம்மா!

மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!

அம்மா என்ற குரலுக்கும்,
அந்த ஒலிக்கும்,
இன்றும் மழலை போல் தான்
ஓடத்தோன்றுகிறது!

60 வெறும் எண் தானே?- கடந்தாலும்
அவள் என் பெண் தானே?
அம்மா என்ற
சொல்லுக்கு வயதேது?
வருத்தம் என்றால்
தஞ்சமடைய வேறிடமேது?

60ம் 70ம் வந்திருக்கும்
அம்மாவின் அன்பும், பாசமும்
தினமும் தொடர்ந்திருக்கும்,
அவை நிலைத்திருக்கும் என
என் மனமும் இறைவனிடத்தில்
தினமும் சொல்லியிருக்கும்…!

No comments:

Post a Comment