Saturday, February 9, 2013

எப்படி சேருது கலோரி சத்து?




எப்படி சேருது கலோரி சத்து?

கலோரி சத்து & கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை. காருக்கு எப்படி பெட்ரோலோ, அப்படி உடலுக்கு எரிபொருள் கலோரி தான். ஆனால், அதிக கலோரி சேர்ந்தால் தான், உடல் எடை கூட ஆரம்பிக்கிறது. அதனால், கலோரி சத்துள்ள உணவை குறைப்பது நல்லது.

கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), புரோட்டீன் (Protein), கொழுப்பில் தான் கலோரி கிடைக்கிறது. உடலில் அதிக கலோரி சேர சேர, அது, கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

புரோட்டீன், கார்போஹைட்ரேட்டில் தலா 4 கலோரி உள்ளது. ஆனால், கொழுப்பு உணவுகளில், ஒன்பது கலோரி உள்ளது. அப்படியானால், கொழுப்பை தவிர்க்கத்தானே வேண்டும்?

நடுத்தர வயதுள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் இரண்டாயிரம் வரை கலோரி தேவை. ஓட்டப்பந்தயம் உட்பட விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக கலோரி சத்து இருந்தாலும், அவை, அவர்களின் விளையாட்டால் கரைந்து விடும்.

டாக்டரிடம் போகும் போது, உங்களுக்கு கலோரி (Calorie) சத்து போதுமானதா? அதிகமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான், உடல் பருமன், பிரச்னைகள் வராமல் இருக்கும்.

கண்டதையும் நினைக்காதீங்க... சாப்பிடாதீங்க... அப்புறம் ஏன் டாக்டரிடம் போகப்போறீங்க...?

நோய் வருவதற்கு இரண்டு முக்கிய எதிரிகள்தான் காரணம். ஒன்று மனம்; இன்னொன்று உணவு! இரண்டையும் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டுவிட்டால், ஒருவருக்கு நிச்சயம் எந்த பெரிய உடல் கோளாறும் வரவே வராது.

ஆனால், யாருக்கு தான் இந்த இரண்டு நப்பாசைகளும் இல்லாமல் இருக்கிறது. எதையாவது மனதில் போட்டு, அதனால், படாதபாடு படாமல் இருக்க முடிகிறதா? இல்லை... ஓட்டலுக்கு போனால், ஏதாவது சாப்பிடாமல் இருக்க முடிகிறதா? இரண்டுமே இல்லையே!

இப்போது, இதய கோளாறு, சர்க்கரை வியாதி முதல் பல நோய்களுக்கும் இந்த இரண்டும் தான் முக்கிய காரணம் என்று டாக்டர்கள் தலைப்பாடாக அடித்துக் கொள்ளத்தான் செய்கின்றனர். ஆனால், கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கிறது. முடியாதவர்கள், டாக்டருக்கும், மருந்துகளுக்கும் மாத பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டியிருக்கிறது.

நம் உடலில் சதைகள், எலும்புகள், ரத்த ஓட்டம், சுரப்பிகள், என்சைம்கள், முக்கிய உறுப்புகள் தான் நமக்கு பல்வேறு குறைபாடுகளையும் தருகிறது. நாம் நம் உடலில் உள்ள இந்த உறுப்புகளை எல்லாம் தொல்லைப்படுத்தாமல் இருந்தால், இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து, நமக்கு தொந்தரவு தராமல் இருக்கும்.

நம்மில் பலரும், ஒரு உணவை சாப்பிடும் முன், அதனால், உடலுக்கு நல்லதா கெட்டதா என்று தான் யோசிக்கிறோம். ஒன்று, தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். இரண்டாவது, தெரிந்தே, "என்ன வந்து விடப்போகிறது?" என்று "உள்ளே" தள்ளிவிடுகிறோம்.

ஆனால், இப்படி இரண்டு வகையிலும், சாப்பிட்டு விடுவோர் தான், பின்னாளில் அவஸ்தைப்படுகின்றனர். இப்போதுள்ள இளம் வயதினர், கொழுப்பு என்று தெரிந்தே, பர்கர் (burger) , பிட்சா, குளிர்பானங்கள் என்று கண்டபடி சாப்பிட்டு விடுகின்றனர்.

இந்த உணவு வகைகளையே சாப்பிடாமல், உடலை கட்டுக்குள் வைத்திருப்போரை இவர்கள் பார்த்தால் தெரியும். என்னதான் பணக்காரராக இருந்தாலும், உணவு வகையில் கட்டுப்பாடு உள்ளவர்கள் பலர் இன்றும் உள்ளனர். அவர்கள், தலைவலி என்று தலையை பிடித்ததில்லை; காய்ச்சல் என்று படுத்ததில்லை.

அப்படி ஏன் உங்களாலும் இருக்க முடியாது? முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதோ சில அரிய டிப்ஸ்கள்:

* ஒரு நாளைக்கு 3 முதல் 5 பழங்கள் வரை சாப்பிட வேண்டும். ஜூசாகவோ, பழமாகவோ சாப்பிடலாம். ஆரஞ்சு (Orange), ஆப்பிள் (Apple), பப்பாளி, வாழைப்பழம் என்று சாப்பிட வேண்டும்.

* மங்கலான நிறமுள்ள பழங்களை விட, அடர்த்தியான நிறம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அதில் தான் சத்துக்கள் உள்ளன.

* ஒரு நாளைக்கு, இரண்டு வகை கால்சியம் சத்துள்ள உணவு சேர்க்க வேண்டும். காய்கறிகள், தானிய வகைகள், தயிர் சேர்த்தாலே, கால்சியம் தேவை பூர்த்தியாகி விடும்.

* வெஜிடபிள் ஜூஸ் கண்டிப்பாக, ஒரு நாளைக்கு ஒரு டம்ளராவது குடிக்க வேண்டும். ரசம், சூப் போன்ற வகையில் இதை ஈடுகட்டலாம்.

* எண்ணெய், தலையில் தேய்ப்பதோடு இருக்கட்டும். உடலில் உள்ளே போகக்கூடிய உணவுகளில், அதிகபட்சம் ஒரு நாளைக்கு 3 & 4 ஸ்பூனோடு நிற்கவேண்டும். உணவு வகைகளில், எண்ணெய் அதிகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

* சிகரெட்டை விட வேண்டும். மது குடிப்பதை தவிர்க்க முடியாவிட்டால், வாரத்துக்கு 3 & 5 தடவை குறைந்த அளவு மது அருந்தலாம். படிப்படியாக நிறுத்தியும் விட்டால் நல்லது.

* முப்பது வயது வரை, கேக், அது தொடர்பான இனிப்பு சமாச்சாரங்கள் சரி! ஆனால், அதற்கு மேல், மைதா சம்பந்தப்பட்ட எந்த உணவும் மிகவும் குறைவாகவே, ஏதோ நாக்கு ருசிக்கு மட்டும் சுவைக்கலாம்.

* நார்ச்சத்துள்ள காய்கறி, தானிய உணவு வகைகள் சாப்பிடுவோருக்கு எந்த உடல் தொல்லையும் வராது.

* தினமும், அடிக்கடி கண்ட கண்ட சுவையில் காபி, டீ உட்பட பல பானங்கள் குடிப்பதை விட்டு, பல்வேறு சத்துக்கள் உள்ள கஞ்சியே அமிர்தம்.

* ஓட்ஸ் (Oats), ஓட் மீல் ஆகியவை இப்போது பிரபலம். ரத்த அழுத்தம், சுகர் (Sugar) கட்டுப்படுத்த, இது மிகவும் நல்லது. கண்டிப்பாக சாப்பிட்டு வரலாம்.

* உணவுகளில் கேரட் (Carrot), கோஸ், வெள்ளரிக்காய், வெங்காயம் (Onian), தக்காளி (Tomato), குடை மிளகாய் போன்ற சத்துள்ள காய்கறிகளை சேர்க்கலாம்.

* கொழுப்பு சத்துள்ள உணவு, தொடவே வேண்டாம். சிப்ஸ் போன்ற சமாச்சாரங்கள், நொறுக்குத்தீனிகள், நாற்பதை தாண்டி விட்டால், நோ!

மனதால் எப்படி பாதிப்பு?

மருத்துவ நிபுணர்களை கேட்டால், "எல்லா நோய்களுக்கும் மனம் தான் காரணம். அது தான் உடலை பாதிக்கிறது" என்பர். மன அழுத்தம் வந்துவிட்டால், அது, உடலில் உள்ள உறுப்புகள் இயக்கத்தை பாதிக்கிறது; சுரப்பிகளை பாதிக்கிறது. சுரப்பிகள் இயங்காததால், இன்சுலின் பாதிக்கிறது. அதனால், சர்க்கரை வியாதி வருகிறது. இப்படி வருவதைத்தான், "சைக்கோசொமாட்டிக்" வியாதிகள் என்று சொல்வர். அதில், இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் முதல் எல்லாம் வருகின்றன.

No comments:

Post a Comment