Friday, January 18, 2013

நலம் கொடுக்கும் இலைகள். . .







வேப்பிலை. . .

குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை. . .

கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை. . .

அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை. . .

இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை. . .

தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை. . .

சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை. . .

தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

மா இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ விரைவில் ஆறும்.
மாந்தளிரை மென்று தின்று வர, பல் ஈறு உறுதிப்படும்.
மா இலையைத் தீயிலிட்டுப் புகையை சுவாசிக்கத் தொண்டை வலி மாறும்.

இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும்.
உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப் போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன, வயிற்றுவலி குணமாகும்.


பப்பாளி இலை. . .

பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை. . .

இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை. . .

சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை. . .

தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை. . .

முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை. . .

தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை. . .

எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது

 — Thanks Vlambaram NewspaperRaja MahendranRaja Mahendran and Gowri Dayalan.

No comments:

Post a Comment