Friday, September 20, 2013

சேவை



காந்திதேசமென்று
கண்டம் விரியக்கத்தி
கந்தக கலாச்சாரம் மேவும்
கலவர பூமியே

சொந்தம் நீயென்று
சொர்ப்பனத்தில் இருந்தோம்
விந்தைகள் புரிந்து நீ
விளையாடுகிறாய் விற்பனமாய்

வெந்தபுண்ணில்
வேலினைப்பாச்சி
குந்தகம் செய்வதா - உன்
குறுகிய அரசியல்

பந்தயக்குதிரைகளாய்
பாரெல்லாம் அலையும்
நிந்தனை புரிந்துமா
நீ தருகிறாய் ஆயுதம்!

சிந்தை நிறைந்த
சிங்கார ஆட்சியா உன்னிடத்தில்
பந்தயம் போட்டு வெடிக்குது குண்டுகள்
பார்த்துக்கொள் உன்னை

குந்த நிலமுமின்றி
குண்டு மழையினிலே
பந்தம் பல தொலைத்து
பாழான எங்களிடமா? - நாம்

சிந்தும் கண்ணீரின் ஏழ்மை - உனை
சிரிக்க வைக்கிறதா?
சந்தனப் பேழையில் சுதந்திரம்
சயனித்தவனை சாய்த்த பூமியல்லவா

வந்தொருமுறை எம்மேல்
வாரியிறைத்த சேறு - உலக
சந்தி சிரித்துமா
சதியை நீ விடவில்லை- உலகை

முந்தும் முயற்சியிலே
முதுகில் குத்தவும்
சொந்த நலனுக்காய்
சொரணை இழப்பதுவும்

அந்ந அகிம்சா முர்த்திக்கு
அவமானம் என்றுணர் - நல்லைக்
கந்தன் காலடியில் அகிம்சைக்
காவியம் புதுப்பித்த
மைந்தன் தேசமிது
மலை வரினம் பணியாது!

Thanks: தலைத்தீவான்

No comments:

Post a Comment